6 th SCIENCE NEW BOOK மனித உறுப்பு மண்டலங்கள்.


 மனித உறுப்பு மண்டலங்கள்

உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனதுநமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை

  1. எலும்பு மண்டலம்
  2. தசைமண்டலம்
  3. செரிமான மண்டலம் 
  4. சுவாசமண்டலம்
  5. இரத்தஓட்ட மண்டலம்
  6. நரம்பு மண்டலம்
  7. நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
  8. கழிவு நீக்க மண்டலம்


எலும்பு மண்டலம்


எலும்பு மண்டலமானது எலும்புகள்,குருத்தெலும்புகள், மற்றும்

மூட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது.


தசைகள் ைக்க்படுவதற்கு ற்ற பகுதியாக எலும்புகள்

திகழ்கின்றன.

நடத்தல், ஓடுதல், மெல்லுதல், போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.

மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது.

எலும்பு மண்டலம் இரண்டு பிரிவு கொண்டது. அவை அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்.

 

அச்சுச் சட்டகமானது மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குகிறதுஅவை

1. மண்டையோடு

2.முதுகெலும்புத் தொடர் (முதுகெலும்பு)

3. விலா எலும்புக் கூடு


இணையுறுப்புச் சட்டகமானது மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. 


மண்டையோடு

மண்டை ட்டில் மண்டை ட்டு எலும்புள் மற்றும் மு எலும்புள் ள்ள.

வாய்க் குழியின் அடித்தளத்தில் காணப்படும் ஹயாய்டு எலும்பு மற்றும் செவிச் சிற்றெலும்புகளான சுத்தி எலும்பு, பட்டடை எலும்பு, அங்கவடி எலும்புகளும் மண்டையோட்டில் அடங்கும்.

மனிதர்களின் முகத்திலேயே கீழ்த்தாடை எலும்பு தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது


முதுகெலும்புத் தொடர்

முதுகெலும்புத் தொடர் மண்டையோட்டின் அடிப் புறத்தில் இருந்து தொடங்குகிறது. இது தண்டு வடத்தைப் பாதுகாக்கின்றது. இது சிறிய முள்ளெலும்புத்  தொடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது


விலா எலும்புக் கூடு

விலா எலும்புக் கூடு 12 ள் கொண்ட வளைந்த, தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது. வை மெ்மையான யம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.


கைகால் எலும்புகள்

மனினின் கை ால் எலும்புள் இரண்டு களைக் கொண்டவை, வை முன்னங்கை மற்றும் பின்னங்கால் என்படும்.


எலும்பு வளையம்

அச்சுச் சட்டகத்துடன் முன்னங் கைகளையும், பின்னங் கால்களையும் இணைப்பதற்கு முறையே மார்பு வளையம் மற்றும் இடுப்பு வளையமும் உதவுகின்றது.

ஒரு தனி எலும்பு வளையாது, பல்வேறு எலும்புகள் முழங்கையில் இணைந்து கையை மடக்க உதவுகின்றன.


1.நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச் சிறியது நமது உள்காதில் உள்ள அங்கவடி (stapes) எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்). நமது உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.


2. குழந்தைகள் பிறக்கும் பொழுது 300 க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள் வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆகையால் முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக்கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.


நமது உடலில் எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்துடன் சேர்ந்து தசை மண்டலமும்  உடலசைவிற்கு  உதவுகிறது.

தசைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. ஆகையால் அவை உடல் அசைவிற்கு உதவுகின்றன.


மூன்று வகை தசைகள் உள்ளன.

1. எலும்புத் தசைகள்

2. மென்தசைகள்

3. இதயத் தசைகள்


தசைகளால் தள்ள இயலாது. இழுத்துக் கொள்ள மட்டுமே இயலும். மூட்டுக்களில் எலும்புகளைஅசைவிக்க இரு தசைகள் தேவைப்படுகிறது. ஒரு தசை சுருங்கும் பொழுது  மற்றொன்று விரிவடைகிறது

.கா: முன்னங்கையை மேலும், கீழும் அசைவிக்க இருதலைத் தசை, முத்தலைத் தசை என இரு வகைத் தசைகள் தேவைப்படுகின்றன. நமது முன்னங்கையை தூக்கி உயர்த்தும் பொழுது  இரு தலைத்தசை சுருங்கி, சிறியதாகிறது, அதே சமயம் முத்தலைதசை விரிந்து கையை மேலே உயர்த்த உதவுகிறது

நாம் முன்னங்கையை கீழ் இறக்கும் பொழுது முத்தலைத் தசைசுருங்கி இருதலைத் தசைவிரிவடைந்து கையை கீழே இறக்க உதவுகிறது.


எலும்புத் தசை

எலும்புத் தசைகள் நமது லில் ள்ள எலும்புளுடன் ந்து செய்படக் கூடியவை. நமது விரு்பத்திகேற்ப செய்படுவதால், வற்றை இயக்கு தசைகள் ன்கிறோம்.

.கா: கைகளில் உள்ளதசைகள்.


மென்தசைகள்

மென்தசைகள் வுக் குல், சிறுநீர்ப் பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புக்களின் சுவர்களில் காணப்படும். இவை நம் விரு்பத்திகேற்பச் செய்பதவை. எனவே, இவை கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகின்றன.


இதயத் தசைகள்

இதயத்தின் சுவர் இதயத் தசைகளால் ஆனது. வை சீராவும், தொடர்ச்சியாவும் இதயத்தை துடிக்க வைக்கின்றன. இவையும் நமது விருப்பத்திற்கேற்ப கட்டுப்படாத இயங்கு தசைகளே.


செரிமான மண்டலம்

உணவுக் குழாயுடன் தொடர்புடைய செரிமான சுரப்பிகளாக உமிழ் நீர் சுரப்பி, கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவை உள்ளன.


உணவுக் குழாய் சுமார் 9 மீட்டர் நீளமுடைய தசையாலான நீண்ட குழல் ஆகும். இரைப்பை செரிமானத்தின் பிரதான உறுப்பாக உள்ளது. சிறு குடலில் உட்கிரகித்தல் நடைபெறுகிறது.


சுவாச மண்டலம்

சுவாச வாயுக்களின் பரிமாற்றம் மற்றும் சுாசி்தல் நிழ்ச்சியில் ஈடுபட்டுள்ள மண்டலம் சுமண்டலம் ஆகும். இதில் நாசித் துளைகள், நாசிக் குழி, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குல், கிளைமூச்சுக்குல் மற்றும் நுரையீர்கள் ங்கும்.


நுரையீரலில் ற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே O2  மற்றும்  CO2 ரிமாற்றம் நடைபெறுகிறது.


குரல் வளைமூடி (எப்பிகிளாட்டிஸ்) என்றஅமைப்பு சுசப் பாதைக்குள் வு செல்வதை தடுக்கின்றதுமூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது.


நுண் காற்றுப் பைகளில் (ஆல்வியோலைகளில்) திறக்கின்ற. நுரையீர்களைச் சுற்றி இரு அடுக்குகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படலம் காணப்படுகிறது. இதற்கு ப்ளூரா (Pleura) என்று பெயர்.


மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய  300 மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ளன. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறோம்.

 

 


Post a Comment

0 Comments