6 th SCIENCE NEW BOOK 3 rd TERM / நீர்.

6 th SCIENCE NEW BOOK 3 rd TERM / நீர் 


இயற்கையில் நீரானது மூன்று நிலைகளில் காணப்படுகிறது. அவை திண்மம், நீர்மம் மற்றும் வாயு நிலையாகும்.


திண்ம நிலை (பனிக்கட்டி)

இது உயரமான மலைகளிலும் பனிப்பாறைகளிலும் துருவப் பிரதேசங்களிலும் பனிக்கட்டியாகவும் மூடு பனியாகவும் காணப்படுகிறது.


திரவ நிலை (நீர்)

பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் நிலத்தடியில் நீரானது திரவ நிலையில் காணப்படுகிறது.


வாயு நிலை (நீராவி) 

நம்மைச் சுற்றிகாணப்படும்காற்றில் நீராவி வாயு நிலையில்  காணப்படுகிறது. புவியில் காணப்படும் நீரில் 97 % நீரானது உப்பு நீராகும். நன்னீரின் அளவு வெறும் 3 % ஆகும்.


மொத்தம் 3% உள்ள நன்னீரானது பின்வருமாறுபரவி உள்ளது.

  • துருவபனிபடிவுகள்,பனியாறுகள்- 68.7%
  • நிலத்தடி நீர் - 30.1%
  • மற்ற நீர் ஆதாரங்கள் - 0.9%
  • மேற்பரப்பு நீர் - 0.3%

மொத்த மேற்பரப்பு நீரான 0.3% பின்வருமாறு பரவியுள்ளது.

  • ஏரிகள் - 87%
  • ஆறுகள் - 2%
  • சதுப்பு நில நீர் - 11%

97% நீரான து பெருங்கடல்களிலும், கடல்களிலும் காணப்ப டுகிறது.

நீரின் இயைபு

நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற , மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப் பொருளாகும்.

இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஓர் ஆக்ஸிஜன் அணுவுடன் இணை ந்து நீர் மூலக்கூறு  உருவாகின்றது. நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O ஆகும்.


நீரின் புற இயைபு இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. நீரில் கலந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது  நன்னீர், உவர்ப்பு நீர் மற்றும் கடல் நீர் என மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.


நன்னீரில் குறைந்த பட்சம் 0.05% தொடங்கி அதிகபட்ச மாக 1% அளவுள்ள உப்புகள் கரைந்திருக்கும். உவர்ப்பு நீரில் அதிகபட்ச மாக


3% வரையில் உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும். கடல் நீரில் 3 சதவீதத்திற்கு மேற்பட்ட அளவில் உப்புகள் கரைந்துள்ளன .

சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு போன்ற உப்புகள் கடல் நீரில் கரைந்துள்ளன .

பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரானது 0o செல்சியஸ் வெப்ப நிலையில் பனிக்கட்டியாக உறைகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது

நீர் சுழற்சியானது மூன்று நிலைகளைக் கொண்டுள்ள து. அவை ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகும். இந்த நீர் சுழற்சியினை நாம் ஹைட்ரா லாஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle) 
என்றும் அழைக்கிறோம்.


தாவரங்களின் இலைத்துளைகள் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.


நீர் சுழற்சியின் காரணமாக இயற்கையில் எப்பொழுதும் நீர் மூன்று நிலைகளிலும் காணப்படுகிறது.

இயற்கை நன்னீர் ஆதாரங்கள்

மூன்று வகையான இயற்கை நன்னீர் ஆதாரங்கள் புவியில் காணப்படுகின்றன .

1. மே ற்பரப்பு நீர்

2. உறைந்த நீர்

பூமியில் உள்ள மொத்த நன்னீரில் பெருமளவு, அதாவது 68.7% உறைந்த நிலையில் காணப்படுகிறது.

3. நிலத்தடி நீர்

மேலும் தெரிந்து கொள்க:

1. நீரின் கன அளவை லிட்டர் மற்றும் மில்லி லிட்டர் போன்ற அலகுகளால் அளக்கலாம்.

2. காலன் என்பதும் நீரின் கன அளவினை அளக்கக்கூடிய அலகாகும்.

3. ஒரு காலன் என்பது 3.785 லிட்டர் ஆகும்.

4. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை TMC/Feet என்ற அலகால் அளக்கப்படுகின்றது.

5. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கியூசக் (கன அடி/விநாடி) என்ற அலகால் அளக்கப்ப டுகிறது.

இமயமலை

இமயமலை பனிப்படிவுகள்பனிப் பாறைகள் மற்றும் பனியாறுகளைக்  கொண்டுள்ளது.ஆசியாவின் முக்கிய ஆறுகளில் 10 பெரிய ஆறுகள்    இமயமலையில் இருந்து தொடங்கிப் பாய்கின்றன . 

ஏறக்குறைய நூறு கோடி மக்களின் வாழ்வாதாரமான நீர்த் தேவையை  இவ்வாறுகள் பூர்த்தி செய்கின்றன .


நீர்ப் பற்றாக் குறைக்கான முதன்மையான காரணங்கள்

1. மக்கள் தொகைப் பெருக்கம்

2. சீரான மழை பொழிவின்மை

3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்

4. நீர் மாசுபடுதல்

5. நீரினை கவனக்குறைவாக கையாளுதல்

நீரினைக் கவனமாகவும், சிக்கனமாகப் பயன்படுத்தி அதனை வருங்கால தலை முறையினருக்காகப் பாதுகாத்தலையே நாம் நீர்ப் பாதுகாப்பு என்கிறோம்.

நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

1. நீர் மே லாண்மை

2. மழை நீர் சே கரிப்பு

கூவம் ஒரு முகத்துவாரம்!

நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்துவாரம் என்று பெயர். இது நிலத்திலிருந்து நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். சில தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு உறைவிடமாக முகத்துவாரம் அமைகிறது.


சதுப்பு நிலங்கள்

சதுப்பு நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள் ஆகும். அவை பெரிய ஆறுகளைச் சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின் கரைகளிலோ காணப்படும்.

சதுப்பு நில நீர் நன்னீராகவோ , உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம். உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன .

சிதம்பரத்தினை அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள், சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்புநிலம் ஆகியன தமிழ்நாட்டில் உள்ள சில சதுப்பு நிலங்களாகும்.


Post a Comment

0 Comments